காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்த சர்வதேச நெருக்கடிகள் குழு
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நெருக்கடிகள் குழு அங்கு காணமல் போன உறவுகளிற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக 754 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்தித்த மேற்படி குழுவினர் அவர்கள் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து கோப்பாப்பிலவில் இராணுவத்தினரிடமிருந்து தங்கள் காணிகளை மீட்கப் போராடிவரும் மக்களையும் மேற்படி குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed